உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு - அதிமுக - திமுக விருப்ப மனு அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், வருகிற 15 மற்றும் 16ஆம் தேதிகளில், விருப்ப மனுக்களை பெற்று அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி பதவிகள் வாரியாக விருப்ப மனுக் கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 
அதிமுக சார்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அதில், தமிழ்நாட்டில், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட அனுமதி கோரும், கட்சி உறுப்பினர்கள், வருகிற 15 மற்றும் 16ஆம் தேதிகளில், கழக அமைப்பு ரீதியாக செயல்படும் சம்பந்தப்பட்ட மாவட்ட தலைநகரங்களில், விருப்ப மனுக்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.